Coronavirus

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

நொய்டா பகுதிகளில் ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் பொது இடங்களுக்கு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா பரவல் குறித்து அறிந்து கொள்வதற்கு, கொரோனா பாதிக்கப்பட்ட நபர், நாம் இருக்குமிடத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது. அந்த ஆப்பை அனைவரையும் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்திவருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைல் போனில் ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் பொது இடங்களுக்கு மக்கள் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் இருப்பது கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவன ஊழியர்கள் கட்டாயம் ஆரோக்ய சேது ஆப்பை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்துவைத்திருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, ஆரோக்ய சேது ஆப்பில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்

Related posts

Chinese virologist claims COVID-19 was made in Wuhan lab

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Penbugs

கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் அறிவிப்பு

Anjali Raga Jammy

சிஏபிஎஃப் கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்பனை – அமித் ஷா அறிவிப்பு

Penbugs

Lockdown restrictions announced in TN from May 15

Penbugs

தமிழகத்தில் இன்று 5717 பேர் டிஸ்சார்ஜ்!

Penbugs

COVID19: Akshay Kumar becomes 1st Bollywood actor to shoot outdoors

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா…!

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதி…!

Kesavan Madumathy