Coronavirus

கொரோனா நோய்த் தொற்று உறுதி ; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற, இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி என்றாலே ‘இருட்டுக்கடை அல்வா’ என்று தனித்துவமான, தனகென்று தனி ’பிராண்ட்’ பெயரை உருவாக்கியவர் ஹரிசிங். திருநெல்வேலிக்குச் சென்றவர்கள் யாரும் அல்வா வாங்காமல் வெறும் கையோடு திரும்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் தனது இருட்டுக்கடை அல்வாவுக்கு நற்பெயரைப் பெற்றிருந்தார் ஹரி சிங். இந்த நிலையில் கொரொனா பாதிக்கப்பட்டதால் மன வேதனை அடைந்த ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல், சளி ஆகியவற்றால் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஹரி சிங். இந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த தகவல் அனைவர் மத்தியிலும் சோகத்தையும் ,அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது

Related posts

உதவியாளருக்கு கொரோனோ ; 7 நாட்கள் தனிமை படுத்திக்கொண்ட பன்வாரிலால் புரோஹித்

Penbugs

முதல்வருடன் ஆலோசனைக்கு பின்னர் மருத்துவக்குழுவினரின் பேட்டி

Penbugs

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி

Penbugs

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Penbugs

சாதித்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ; கொரோனா மருந்து பரிசோதனை வெற்றி

Penbugs

Paruthiveeran singer Lakshmi Ammal struggles financially, Karthi promises help

Penbugs

COVID19: TN crosses 21000 mark, 938 cases today

Penbugs

He was practising hard, you’ll see his helicopter shot soon: Raina on Dhoni

Penbugs

Trichy: Police helps pregnant woman deliver baby by donating blood

Penbugs

CPL 2020: Fabian Allen ruled out after missing his flight

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy