Coronavirus

சாதித்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ; கொரோனா மருந்து பரிசோதனை வெற்றி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், எதிர்ப்புசக்தியை உருவாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 9 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இங்கிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பரிசோதனையில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் 1077 பேருக்கு செலுத்தப்பட்டது.

இந்த சோதனையில், மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது என்பதும் ஆராயப்பட்டது.

இதேபோல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனகா கண்டுபிடித்த அடெனோ வைரல், லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் பிவிட்சர் நிறுவனம் கண்டுபிடித்த எம் ஆர் என் ஏ தடுப்பு மருந்து மற்றும் வால்னெவா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து ஆகிய 3 மருந்துகளும் பாதுகாப்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், ஒரு சிலருக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற லேசான பக்கவிளைவுகளே இருந்ததாகவும், அதுவும் சரி செய்யக் கூடிய அளவிலேயே இருப்பதாகவும் பல்கலைக்கழக ஜென்னர் நிறுவன இயக்குநர் அட்ரியன் ஹில் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயைத் தடுக்கும் மூலக்கூறுகளில் நடுநிலையான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் உடலின் டி-செல்களில் எதிர்வினையை இந்த தடுப்பூசி ஏற்படுத்துவதாகவும், இந்த செல்கள் கொரோனா வைரசை எதிர்த்துப் போராட உதவுவதாகவும் அட்ரியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கண்ட மூன்று நிறுவனங்களுடன் இங்கிலாந்து அரசு 9 கோடி கொரோனா தடுப்பு மருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.

Related posts

7 YO throws prom for nanny as its cancelled due to COVID19

Penbugs

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

Qatar makes wearing masks outside mandatory, fine up to $50000

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,778 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை – தமிழக அரசு

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

Kesavan Madumathy

ரூம் கிடைக்கவில்லை .. மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை! வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த சீன பயணி

Penbugs

தமிழகத்தில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

Kesavan Madumathy

தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர பொதுமுடக்கம்; ஞாயிற்றுக்கிழமை முழுப் பொதுமுடக்கம் அறிவிப்பு

Penbugs

NZ reinstates COVID19 restrictions after 1st locally transmitted case in 102 days

Penbugs

Leave a Comment