புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்
ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர் .
ஆலோசனை முடிந்த பின்னர் எடப்பாடி அவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
அவர் அறிக்கையில் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை; இருமொழிக் கொள்கையே தொடரும்.
தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.
என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பினை தெரிவித்து வருகின்றனர்.