Editorial News

மதுரையில் தன் மகனுக்கு மெழுகுச்சிலை ; தந்தை உருக்கம்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளில் 6 அடிக்கு மெழுகு சிலை அமைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த பாசக்கார தந்தை முருகேசன்.

முருகேசன் – சரஸ்வதி தம்பதியருக்கு இரண்டு மகள்களுக்கு பிறகு, மூன்றாவது மகனாகப் பிறந்தவர் மாரிகணேஷ். அவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சிறு வயதில் புல்லட் பைக் ரேசராக இருந்த மாரிகணேஷ் பல போட்டிகளில் முதலிடம் பிடித்து பதக்கங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிகணேஷ் 2019, நவம்பர் மாதம் 18 ஆம் தேதியில் உயிரிழந்தார்.

மாரிகணேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது தந்தை முருகேசன் சுமார் 6 லட்சம் செலவில் மாரிகணேஷ்க்கு தத்ரூபமாக மெழுகு சிலை செய்துள்ளார்.

மாரிகணேஷின் உருவ சிலையைக் காணவும், முதலாமாண்டு நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தவும் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Related posts

Breaking: YouTube experiences technical problem and is globally down

Penbugs

Pakistan admits that Dawood Ibrahim is in Karachi

Penbugs

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை!

Penbugs

Man “loses” wife in gambling bet, lets friends rape her then pours acid on her for “purification”

Penbugs

Dr BR Ambedkar statue design unveiled

Penbugs

Sourav Ganguly admitted to hospital

Penbugs

IPL 2020, DC vs RCB: DC win by 59 runs

Penbugs

கோயம்பேட்டில் ஐந்து ரூபாய்க்கு தானியங்கி கருவியில் முகக்கவசம் விற்பனை

Penbugs

PM Modi, CM Edappadi condole actor Vivekh’s demise

Penbugs

Viral video: Priest raises hand to bless little girl, she gives him high-five

Penbugs

குடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்

Penbugs

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

Kesavan Madumathy

Leave a Comment