சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.
கடந்த 7ம் தேதி விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.
தொடர்ந்து பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சேவை நேற்று துவங்கியது.
இந்நிலையில் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவையும் இன்று முதல் துவங்கியுள்ளது.
காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 9 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.