Editorial News Editorial News

அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

உள் ஒதுக்கீடு மூலம், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டண சிரமத்தை தவிர்க்கும் வண்ணம், Post Matric கல்வி உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகைத் திட்டங்கள் மூலம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் தாம் அறிவித்ததாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உதவித்தொகைக்காக காத்திராமல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை, அரசே நேரடியாக செலுத்தும் என்றும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டிருப்பதாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.
அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் எனத் தெரிந்த பின்பும், திமுக உதவுவதாக அறிவித்திருப்பது, ஒரு அரசியல் நாடகமே என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்!

Penbugs

Delhi police release CCTV pics, blame Left groups for attack; Ghosh among 9 suspects identified

Penbugs

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Penbugs

Many WhatsApp number details available on normal Google search

Penbugs

The Simpsons to stop using ‘White’ voices for characters of other colours

Penbugs

Breaking: Lockdown extended till May 17 across India

Penbugs

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

Penbugs

ISRO LAUNCHES WORLD’S LIGHTEST AND INDIA’S FIRST STUDENT-MADE SATELLITE!

Penbugs

நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனை

Penbugs

பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய விராட்கோலி

Penbugs

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்- தமிழக அரசு

Penbugs

Leave a Comment