Coronavirus Editorial News Fashion Gadgets

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

ஒடிசாவில் தங்க மனிதன் என்று அழைக்கப்படும் தொழிலதிபர் 3.5 லட்சம் ரூபாய் மிதிப்பிலான தங்க முகக் கவசத்தை வாங்கி அணிந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முகக்கவசம் அணிய அரசு வலியுறுத்தியுள்ளது. நிறுவனங்கள் வித்தியாசமான ஸ்டைலில் முகக்கவசத்தை தயாரிக்க தொடங்கின. மக்களும் அதை விரும்பி அணிந்து வருகின்றனர்.

புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 3 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட தங்க மாஸ்க் அணிந்து காட்சியளித்தார். ஷங்கர் குராடே என்ற அந்த தொழிலதிபர் இந்தியா முழுவதும் பேசும்பொருளாகினார்.

தற்போது அவரால் ஈர்க்கப்பட்ட ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தங்க மனிதன் என்று அழைக்கப்படும் அலோக் மொகந்தியும் தங்க முகக்கவசம் அணி விரும்பினார். அவர் 3.25 லட்சம் ரூபாய் செலவில் தங்க இழைகளால் தயாரிக்கப்பட்ட என-95 முகக்கவசத்தை அணிந்து வருகிறார்.

இதுகுறித்து அலோக் மொகந்தி கூறுகையில் ‘‘நான் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் தங்கத்திலான முகக் கவசம் அணிந்திருந்ததை டி.வி.யில் பார்த்தேன். எனக்கும் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் இருப்பதால் அவர் வாங்கிய அதே இடத்தில் முகக்கவசம் தயாரிக்க கூறினேன்.

நான் அணியும் என்-95 மாஸ் 90 முதல் 100 கிராம் வரையிலான தங்க இழைகளால் தயாரிக்கப்பட்டது. அதில் மூச்சு விடுவதற்கான சிறிய துளை உள்ளது. அது எனக்கு வசதியாக இருக்கிறது.

மக்கள் என்னை தங்க மனிதன் என்று அழைப்பார்கள். ஏனென்றால், நான் தங்கத்தை விரும்புகிறவன். கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் அணிந்து வருகிறேன். மும்பை நபர் மாஸ்க் அணிந்ததை பார்த்ததும் நானும் அவ்வாறு அணிய விரும்பினேன்’’ என்றார்.

Picture: ANI!

Related posts

Lockdown likely to be extended: Modi to opposition leaders

Penbugs

COVID19: Feeling bad for Abhishek, says Amitabh Bachchan

Penbugs

Police Station celebrates conviction of two rapists

Penbugs

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்

Penbugs

Shoaib Malik to meet Sania Mirza and their son after 5 months

Penbugs

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

Kesavan Madumathy

24,000 விரைவு பரிசோதனைக் கருவிகள் திருப்பி அனுப்பப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்!

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

கண்கலங்கிய ஸ்டாலின் ; ஜெ. அன்பழகன் படம் அறிவாலயத்தில் திறப்பு

Penbugs

அடுத்த ஒரு ஆண்டுக்கு மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்-கேரள அரசு அதிரடி உத்தரவு

Penbugs

ஊரடங்கு காலத்தில் 1,150 டன் மருத்துவப் பொருள்களை கொண்டு சென்ற ரயில்வே

Penbugs

Leave a Comment