Coronavirus

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பா? வரும் 27 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா பாதிப்பு தொடர்பாக வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க தனித்து இருப்பது மட்டுமே சிறந்த வழி என்பதால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல் படுத்தி உள்ளன.

அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஊரடங்கை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அன்றைய தினம் நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். அந்த ஊரடங்கு ஏப்ரல் 14-ந் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், கொரோனா கட்டுக்குள் வராததால், மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நடவடிக்கை எடுத்தார்.

இந்தியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது.

இந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆய்வுக் கூட்டமாக இது இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எனினும், ஊரடங்கு தொடர்பாகவும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிப்பார் என்றே தெரிகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த முறை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய போது, 17 மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

Related posts

Former PM Manmohan Singh tests positive for coronavirus, admitted

Penbugs

19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

Penbugs

அமெரிக்காவில் இரண்டு வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

Penbugs

Yashika Aannand birthday celebration: Fans arrange blood donation campaign

Penbugs

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு

Kesavan Madumathy

கொரோனா: வீடு வீடாக கணக்கெடுக்க உத்தரவு!

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

COVID19: Aishwarya Rai Bachchan and Aaradhya also tested positive

Penbugs

COVID19: Mom drives 1400km on scooty to bring her stranded son home

Penbugs

தமிழகத்தில் இன்று 5470 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Mohammad Shami distributes food to guest workers

Penbugs

Sunny Deol tests positive for coronavirus

Penbugs