Editorial News

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. அதன்படி, பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பொறுப்பில் அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த அமுதா, தற்போது முசோரியில் உள்ள தேசிய நிர்வாக அகாடமியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் கலைஞர் நல்லடக்க நிகழ்வை அரசு சார்பாக ஒருங்கிணைத்தவர் அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் திமுக , அதிமுக என இரண்டு ஆட்சிகளிலும் திறம்பட பணிபுரிந்தவர்.

Related posts

“This is what I want for my birthday” PM Modi writes

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

Kesavan Madumathy

COVID19: Sussanne temporarily moves in with Hrithik to co-parent sons

Penbugs

Chennai woman beats up man who sent her obscene videos by inviting him home

Penbugs

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து: 7 பேர் காயம்

Penbugs

Pallavaram: Migrant workers protest demanding to send back home

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

Supreme court issues notice to centre, to examine CAA validity

Penbugs

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

Penbugs

Messi beats Ronaldo; wins Ballon d’Or for 6th time

Penbugs

Student offers his bonus points to classmate who scored lowest in exam

Penbugs

Breaking: Delhi Govt corona as epidemic; schools, colleges closed till March 31

Penbugs

Leave a Comment