Coronavirus

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆகவும், குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய RT-PCR பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதத்தை 6.4% என்ற அளவிற்கு குறைத்துள்ளோம். கொரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே இலக்கு.

தமிழகத்தில் இதுவரை 68,15,644 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

178 மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு 6 மாதங்களில் ரூ.831 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆக உள்ளது. இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசு 7 ஆயிரத்து 321 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related posts

Frances Tiafoe tests positive for Covid-19

Penbugs

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சீனா அறிவிப்பு…!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Kesavan Madumathy

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை – தமிழக அரசு

Penbugs

தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Mujeeb ur Rahman hospitalized after testing COVID19 positive

Penbugs

தனக்கு கொரோனா இல்லை – அமைச்சர் அன்பழகன் தகவல்

Kesavan Madumathy

சென்னையில் முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை

Penbugs

ENG v WI, 2nd Test: Root returns, Denly misses out

Penbugs

Leave a Comment