தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில் மொத்தம் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 6,28,69,955. வாக்குப்பதிவுக்காக 1,59,165 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 91,180 விவிபேட்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம்.
வாக்குபதிவினை அடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் , சுகாதாரத் துறையும் கேட்டு கொண்டுள்ளன.