தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6 ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் …!
மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை- தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாகின.
செய்தியாளர்கள் கூட்டத்தில் சுநீல் அரோரா பேசுகையில், கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், சுகாதாரத்துறையினர் மூலம் அதனை எதிர்கொண்டு வருகிறோம்.
தேர்தல் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் பணி பெரும் பங்கு வகிக்கும்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது; அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அரசாணைகள், பதிவுகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்கவும் தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு.
சுமார் 88ஆயிரம் வாக்குச் சாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளன- தலைமை தேர்தல் ஆணையர்
அனைத்தும் வாக்கு சாவடிகளும் கீழ் தளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது – சுனில் அரோரா
80 வயது மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. எனினும் இது கட்டாயம் கிடையாது.
வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தலைமை தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளராக அலோக் வர்தன் நியமனம்;
காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் சென்சிட்டிவ் என்பதால் தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என இரண்டு பேரை நியமித்துள்ளோம்” – சுனில் அரோரா
பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன; அனைத்து வாக்கு சாவடிகளும் சானிட்டைசர், குடிநீர் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்படும் – சுனில் அரோரா