ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கு ஜூன் 30ம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இதனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கால அவகாசத்தை மேலும் நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாத அவகாசத்திற்குள் ஆதார்- பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழந்து விடும்.