Editorial News Editorial News

இறந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய எஸ் ஐ வீடியோ வைரல்

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு நாப்பது வயதுள்ள யானை ஒன்று சுற்றி வந்தது.அதன் முதுகில் காயம் இருந்தது. இதை பார்த்த வனத்துறையினர் அந்த யானைக்கு கடந்த மாதம் சிகிச்சை தந்தனர்.

உடல்நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தது.இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு அந்த யானையின் காது கிழிந்து ரத்தம் கொட்ட தொடங்கியது.

வலியும் வேதனையும் தாங்க முடியாமல் யானை, அங்குள்ள தண்ணீருக்குள் நின்று அலறியது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த யானையை வனத்துறையினர் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

யானையும் சில நிமிடங்களில் மயங்கி விழுந்துவிட்டது. இதை பார்த்த டாக்டர்களும், வனத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர் அதனை தொடர்ந்து சோதித்த பொழுது யானை பரிதாபமாக இறந்துவிட்டது என தெரியவந்தது.

அப்போது யானையின் தும்பிக்கையை பிடித்து கொண்டு பெள்ளன் கதறி கதறி அழுதார்.அந்த பெள்ளன் என்பவர்தான் அந்த யானைக்கு சிகிச்சையின்போது சாப்பாடு மற்றும் பழங்களை யானைக்கு தினமும் தந்துள்ளார்.

யானை இறந்ததை பார்த்து, “நான் யாருகிட்ட இனிமேல் பழங்களை தருவேன்.. திரும்பி வாடா.. என்னால முடியல… என்னை விட்டு போகாதேடா..” என்ற தும்பிக்கையை பிடித்து கொண்டே இவர் அழுதது அங்கிருந்த மற்ற அதிகாரிகளையும் கண்கலங்க வைத்துவிட்டது.

யானைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்தபோது அப்போதுதான் யானையின் காது பகுதியை பெட்ரோல் வைத்து தீ மூட்டி எரித்ததற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.மேலும் மேலும் யானை மீது ஆசிட் ஊற்றியும் காயப்படுத்தியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இந்த காயத்தினால் யானையின் உடலில் இருந்து சுமார் 40 லிட்டர் வரை ரத்தம் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

வனத்துறை ஊழியர் பெள்ளன் யானையை பிடித்து கொண்டு அழுத கண்ணீர் வீடியோ இணையத்தில் வைரலாகி, அனைவர் மனதையும் நெகிழச் செய்து‌ வருகிறது.

Related posts

UP Gang rape and murder: Broken ribs, rod inserted in woman’s private part

Penbugs

Don’t want to be judged by my religion: Irrfan Khan’s son Babil

Penbugs

Bangalore Literature Festival to be held on December 12-13

Penbugs

பிரதமர் வருகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Penbugs

Racism is in cricket too: Chris Gayle

Penbugs

Breaking: Road Safety World Series tournament called off

Penbugs

CoronaVirus outbreak: Suriya’s message to everyone

Penbugs

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Penbugs

Mayank becomes youngest Indian judge at 21

Penbugs

Kerala’s ruling and opposing party come together for CAA protest

Penbugs

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

Leave a Comment