தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருக்கு ஏழு பேரின் மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு ஒமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 47 வயதான நபருக்கு தற்போது ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அவருடன் பயணித்த உறவினர்கள் 7 பேருக்கும் பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.