Editorial News

தமிழகம் முழுவதும் Friends of Police அமைப்புக்கு தடை

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு உதவுவதற்காக 1993 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற காவல்துறை நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த சிலரும் போலீசாருடன் இணைந்து தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தடை விதித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பணிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரை ஈடுபடுத்தக்கூடாது என்று காவல் உயரதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் டிஜிபி அளித்த அறிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related posts

India attacks terror camps across LoC in reply to Pulwama attack

Penbugs

இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு நேபாள அரசு தடை

Penbugs

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்

Penbugs

அரசு பள்ளிகளை தற்காலிக கொரோனோ தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு!

Penbugs

Man sues his parents for giving him birth

Penbugs

Report: Kim Jong Un orders people to hand over pet dogs to meat industry for food

Penbugs

விபத்தில் சிக்கிய குஷ்பு!

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

Odisha: Police suspended for repeatedly raping 13YO girl

Penbugs

9YO sends ‘happiness’ puzzle to cheer the Queen, receives Thank you note

Penbugs

சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்

Kesavan Madumathy

COVID19: TN reports 96 new cases

Lakshmi Muthiah

Leave a Comment