சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தனர்.
வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் உயர்நீதிமன்ற உத்தரவில் மாற்றங்களை மேற்கொள்ள விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து ஜாமீன் மறுத்துள்ளது.