நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டுள்ளது.
அதோடு தனுஷ், விஜய்சேதுபதி, வெற்றிமாறன், தாணு, இமான் உள்ளிட்டோரும் தேசிய விருதினை பெற்றனர்.
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ”திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.