சென்னை கிண்டி மற்றும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல்கள் விரைவில் எம்ஜிஎம் ஹெல்த் கேர் குழுமத்தின் வசமாகின்றன.
அப்பு ஹோட்டல்ஸ் லிமிடெட் சென்னை கிண்டி மற்றும் கோவை ஆகிய இடங்களில் லீ மெரிடியன் ஓட்டல்களை நடத்தி வந்தது.
அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதிக் கழகத்திற்கு சுமார் ரூ.18 கோடி நிலுவை தொகை வைத்து இருந்தது. இந்த தொகை 2019ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வாராகடனாக அறிவிக்கப்பட்டது.
அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் நிலுவை தொகையை செலுத்தும் நிலை இல்லை என கூறியதால், இந்திய சுற்றுலா நிதி கழகம் திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே. ராஜகோபாலன் சமர்ப்பித்த ரூ.423 கோடி மதிப்புள்ள கையகப்படுத்தும் தீர்மான திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலை மருத்துவமனையாக மாற்ற திட்டமிட்டுள்ள எம்ஜிஎம் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலை சீரமைத்து நட்சத்திர ஹோட்டலாகவே தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.