இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒருநாள் மற்றும் இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தார் .
பல்வேறு அரசியல் பிரபலங்கள் , திரைத்துறையினர் , விளையாட்டு வீரர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்த்து செய்தியினை இன்று மகேந்திர சிங் தோனி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனியை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி கடிதம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் புதிய இந்தியாவின் அடையாளங்களில் ஒருவர் – மோடி
சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற தகவலை கேட்டதும் ஏமாற்றம் அடைந்தேன் – மோடி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் தோனியும் ஒருவர் – மோடி
உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன், விக்கெட் கீப்பர் என்று வரலாறு தோனியை பெருமைப்படுத்தும் – மோடி
2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் சிக்சர் அடித்து இந்தியாவிற்கு கோப்பையை தோனி வென்று கொடுத்ததை மறக்கவே முடியாது – மோடி
வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமே தோனியை சுருக்கி விட முடியாது, பல கோடி இளைஞர்களுக்கு தோனி உத்வேகம் – மோடி
இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தவர் தோனி – மோடி
சக வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த போது தோனி தனது குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த புகைப்படம் என் மனம் கவர்ந்தது – மோடி



CSA Women Super League | Match 6 | CON vs THT | Dream 11 Prediction | Fantasy Cricket Tips