மறந்த முன்னாள் முதல்வர் திரு மு.கருணாநிதிக்கு, மெரினா கடற்கரையில், அண்ணா அவர்களுடைய நினைவிடம் அருகே நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ரூ.39 கோடி செலவில், 2.21 ஏக்கரில் முன்னாள் முதல்வரின் நினைவிடம் அமைக்கப்படும் என்று பேரவையில் அறிவித்தார்.
மேலும், “இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது, 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர்,” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
“சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.”