Penbugs
Politics

தமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட், அத்துடன் தமிழகத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் காகிதமில்லா பட்ஜெட்.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

தமிழக பட்ஜெட் 2021-2022-ஐ நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் :

6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும்.

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம்.

தேர்தல் வாக்குறுதியின்படி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்.

அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்

அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைக்கப்படும்.

வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.

தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ. 5கோடி ஒதுக்கீடு.

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

தேசிய கடற்சார் நிறுவனம் உதவியுடன், சங்க கால துறைமுகங்கள் அமைந்திருக்கும் இடங்களில் கடல் ஆய்வுகள் நடத்தப்படும்.


கீழடி, சிவகளை, கொடுமணல் அகழாய்வு இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.

அரசு இடங்களை அடையாளம் காண ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழக பட்ஜெட்டில் தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழக காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 14,317 புதிய பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு.

விபத்துகளை தடுக்க, ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும்
சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500கோடி நிதி ஒதுக்கீடு.

நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கீடு.

உணவு மானியத்துக்கு ரூ.8,437.57 கோடி நிதி ஒதுக்கீடு.
புதிய ரேசன் கடைகள் அமைக்கப்படும்.

தற்போதுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.

ரூ.111.24 கோடி செலவில் 200 குளங்களின் தரம் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் உறுதி.

கொரோனா கால நிவாரண தொகையாக ரூ.9,370.11 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்.

தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்.

ரூ.610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி நிதி ஒதுக்கீடு.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150கோடி நிதி ஒதுக்கீடு.

மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்.

இந்தியாவில் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்.

5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.

79,395 குக்கிராமங்களில் நாளொன்றுக்கு ஒருவர் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.

1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும்.

ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்கீடு.

2021-22 ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டப்படும்.

கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்

ஊரக வேலை உறுதித்திட்ட பணிநாட்களை 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

ஊரக வேலை உறுதித்திட்ட ஊதியத்தை ரு.300 ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி நடப்பாண்டு முதல் மீண்டும் ரூ.3 கோடி அளிக்கப்படும்
கிராமப்புறங்களில் உள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி சிறப்பு கோவிட் கடன் உட்பட ரூ.20ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்.

நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில், ரூ.809.71 கோடி செலவில் ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்.

அனைத்து நகரங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் நடைபாதைகள் அமைக்கப்படும்.

1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்படும்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,230 கோடியும், அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடியும் ஒதுக்கீடு

சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2,350 கோடி நிதி ஒதுக்கீடு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகாலுக்கு ரூ.87 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெறும் உயிரியல் அகழ்ந்தெடுக்கும் பணி விரைவுபடுத்தப்படும்

சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு 2,056 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் ரூ.2,371 கோடியில் தீவிரமாக செயல்படுத்தப்படும்

கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை- ஸ்ட்ரான்ஸ் சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் ரூ.335 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்

மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் பகுதிகளில் புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு 3,954.44 கோடி நிதி ஒதுக்கீடு

குடிசைவாழ் மக்களை மனிதாபிமானத்துடன் மறுகுடியமர்த்த புதிய திட்டம் உருவாக்கப்படும்

தமிழக அரசின் பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு

ஊரக புத்தாக்க திட்டம் சீரமைக்கப்பட்டு ரூ.212.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.


அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க 2,200 கி.மீ.க்கு 4 வழிச்சாலை அமைக்கப்படும்.


வீட்டுவசதித்துறையில் உலக வங்கித் திட்டங்களுக்கு ரூ.320.40 கோடி, ஆசிய வங்கி திட்டங்களுக்கு ரூ.171 கோடி நிதி ஒதுக்கீடு.


ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு
மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக நிதி ஒதுக்கீடு ரூ.703 கோடி நிதி ஒதுக்கீடு.

Related posts

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம்

Penbugs

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

முதல்வர் ஸ்டாலினிடம் ரூ5 லட்சம் நிதி கொடுத்த நடிகர் வடிவேலு

Penbugs

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்

Kesavan Madumathy

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

Penbugs

முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்

Kesavan Madumathy

முகஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய வெற்றிமாறன் ; விஜய்சேதுபதி

Penbugs

பெட்ரோல் மீதான வரியில் ₹3 குறைப்பு – முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy

Leave a Comment