தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து நிதியமைச்சர் பேசியதாவது:
“தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவைதான் எளிய உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து முறை. இவர்கள் பெட்ரோல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை மூன்று ரூபாய் அளவிற்கு குறைப்பதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார்” என்று அறிவித்துள்ளார்.
மேலும் இதனால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!