கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை ஐந்து கட்டங்களாக மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
சென்னை மெகா தடூப்பூசி முகாம் விவரம்
இந்நிலையில் ஆறாவது கட்டமாக மாநிலம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிடுபவர்கள் தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கத்தை அடுத்து இந்த முறை சனிக்கிழமையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.