தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,289- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்து 982- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 668- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 466-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 75,288- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.