சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாதையை வரும் திங்கட்கிழமை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, திறந்த வைக்க இருக்கிறார்.
உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலம், காந்தி சிலை அருகே 125 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மெரினா முதல் கோவளம் கடற்கரை வரை மொத்தம் எட்டு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் இந்த தற்காலிக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக பாதையை நிரந்தரமாக வைப்பது குறித்து சென்னை மாநகராட்சி முடிவு எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ,பொதுமக்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.