பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (14-ந் தேதி) இரண்டு ஆயிரம் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இது 8-வது மெகா தடுப்பூசி முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்களை மாநகராட்சியின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-vac-det.jsp
மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தடுப்பூசியினை செலுத்தி கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.