தமிழகத்தில் இன்று 32,221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 18,66,660 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் 2,80,426 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24,405 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 21,72,751ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 2,980, சென்னையில் 2,062 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 460 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 25,665 ஆக உயர்ந்துள்ளது.