கொரோனாவின் இரண்டாவது அலை பெரிய அளவிலான இன்னல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமுடக்கம் காரணமாக தொற்றின் வேகம் குறைந்துள்ளதாக சுகாதார துறையின் அறிக்கை கூறுகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,96,516ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக இன்று கோவையில் 3,488, சென்னையில் 2,596 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 478 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 24,232 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 31,223 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 17,70,503 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.