தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,42,796 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 39 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,112 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 19,978 பேர் குணமடைந்தனர்.
தமிழ்நாட்டில் தற்போது 1,79,205 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று 7,520 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது , கோவையில் 3,390 பேருக்கும், செங்கல்பட்டில் 2,196 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.